இடுக்கணழியாமை

திருக்குறள்:
 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

மு.வ உரை:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

ADVERTISEMENTS
Translation:
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.

ADVERTISEMENTS
Explanation:
The
troubles of that man will be troubled (and disappear) who, however
thickly they may come upon him, does not abandon (his purpose).