இடுக்கணழியாமை

திருக்குறள்:
 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

மு.வ உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

ADVERTISEMENTS
Translation:
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.

ADVERTISEMENTS
Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.