ஆள்வினையுடைமை

திருக்குறள்:
 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

மு.வ உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

ADVERTISEMENTS
Translation:
Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.

ADVERTISEMENTS
Explanation:
Labour will produce wealth; idleness will bring poverty.