ஊக்கமுடைமை

திருக்குறள்:
 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் 
மரம்மக்க ளாதலே வேறு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

மு.வ உரை:
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.

சாலமன் பாப்பையா உரை:
ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

ADVERTISEMENTS
Translation:
Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.

ADVERTISEMENTS
Explanation:
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.