ஊக்கமுடைமை
திருக்குறள்:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
ADVERTISEMENTS
உடல்
முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல்
இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக்
கவலைப்படமாட்டார்கள்.
மு.வ உரை:
உடம்பை
மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும்,
அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது
அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை
நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம்
இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
ADVERTISEMENTS
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.
ADVERTISEMENTS
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.