ஊக்கமுடைமை
திருக்குறள்:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
ADVERTISEMENTS
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
மு.வ உரை:
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
நினைப்பது
எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை
வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர்.
ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
ADVERTISEMENTS
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
ADVERTISEMENTS
In
all that a king thinks of, let him think of his greatness; and if it
should be thrust from him (by fate), it will have the nature of not
being thrust from him.