ஊக்கமுடைமை

திருக்குறள்:
 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத் தனையது உயர்வு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தண்ணீரின்
அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல
மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே
இருக்கும்.

மு.வ உரை:
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

சாலமன் பாப்பையா உரை:
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

ADVERTISEMENTS
Translation:
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

ADVERTISEMENTS
Explanation:
The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.