ஒற்றாடல்

திருக்குறள்:
 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் 
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஓர்
உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி
வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த
பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

மு.வ உரை:
ஓர்
ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால்
கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
Spying by spies, the things they tell
To test by other spies is well.

ADVERTISEMENTS
Explanation:
Let
not a king receive the information which a spy has discovered and made
known to him, until he has examined it by another spy.