ஒற்றாடல்
திருக்குறள்:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
ADVERTISEMENTS
ஆராய்ந்திட
வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர
ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை
யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
மு.வ உரை:
துறந்தவரின்
வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்)
என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
செல்ல
முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை
அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும்
ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.
ADVERTISEMENTS
As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.
ADVERTISEMENTS
He
is a spy who, assuming the appearance of an ascetic, goes into
(whatever place he wishes), examines into (all, that is needful), and
never discovers himself, whatever may be done to him.