ஒற்றாடல்

திருக்குறள்:
 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து 
என்செயினும் சோர்விலது ஒற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆராய்ந்திட
வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர
ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை
யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

மு.வ உரை:
துறந்தவரின்
வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்)
என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:
செல்ல
முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை
அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும்
ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

ADVERTISEMENTS
Translation:
As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.

ADVERTISEMENTS
Explanation:
He
is a spy who, assuming the appearance of an ascetic, goes into
(whatever place he wishes), examines into (all, that is needful), and
never discovers himself, whatever may be done to him.