ஒற்றாடல்
திருக்குறள்:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
ADVERTISEMENTS
சந்தேகப்பட
முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு
அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும்
உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
மு.வ உரை:
ஐயுற
முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல்
எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்
சந்தேகப்படாத வேடத்தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது
நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத
வல்லமை பெற்றவரே ஒற்றர்.
ADVERTISEMENTS
Of unsuspected mien and all-unfearing eyes,
Who let no secret out, are trusty spies.
ADVERTISEMENTS
A
spy is one who is able to assume an appearance which may create no
suspicion (in the minds of others), who fears no man's face, and who
never reveals (his purpose).