ஒற்றாடல்

திருக்குறள்:
 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு 
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஓர்
அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர்,
சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை
நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

மு.வ உரை:
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அரசுப்
பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின்
சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

ADVERTISEMENTS
Translation:
His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.

ADVERTISEMENTS
Explanation:
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.