ஒற்றாடல்

திருக்குறள்:
 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

மு.வ உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

ADVERTISEMENTS
Translation:
These two: the code renowned and spies,
In these let king confide as eyes.

ADVERTISEMENTS
Explanation:
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.