கண்ணோட்டம்

திருக்குறள்:
 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

மு.வ உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

ADVERTISEMENTS
Translation:
To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.

ADVERTISEMENTS
Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.