கண்ணோட்டம்

திருக்குறள்:
 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் 
உண்மை நிலக்குப் பொறை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

மு.வ உரை:
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

ADVERTISEMENTS
Translation:
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.

ADVERTISEMENTS
Explanation:
The
prosperity of the world springs from the kindliness, the existence of
those who have no (kindliness) is a burden to the earth.