கண்ணோட்டம்

திருக்குறள்:
 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

மு.வ உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

ADVERTISEMENTS
Translation:
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.

ADVERTISEMENTS
Explanation:
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.