வெருவந்தசெய்யாமை

திருக்குறள்:
 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்னது உடைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
யாரும்
எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம்
குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும்
தோற்றமேயாகும்.

மு.வ உரை:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக்
காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும்
உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

ADVERTISEMENTS
Translation:
Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

ADVERTISEMENTS
Explanation:
The
great wealth of him who is difficult of access and possesses a
sternness of countenance, is like that which has been obtained by a
devil.