வெருவந்தசெய்யாமை

திருக்குறள்:
 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் 
நீங்காமை வேண்டு பவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
குற்றங்கள்
நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது
மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

மு.வ உரை:
ஆக்கம்
நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது)
அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

ADVERTISEMENTS
Translation:
For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.

ADVERTISEMENTS
Explanation:
Let
the king, who desires that his prosperity may long remain, commence his
preliminary enquires with strictness, and then punish with mildness.