வெருவந்தசெய்யாமை

திருக்குறள்:
 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நடைபெற்ற
குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம்
அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

மு.வ உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:
தவறு
செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர்
திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

ADVERTISEMENTS
Translation:
Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

ADVERTISEMENTS
Explanation:
He
is a king who having equitably examined (any injustice which has been
brought to his notice), suitably punishes it, so that it may not be
again committed.