கொடுங்கோன்மை

திருக்குறள்:
 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 
அளியின்மை வாழும் உயிர்க்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

மு.வ உரை:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா உரை:
மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

ADVERTISEMENTS
Translation:
As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

ADVERTISEMENTS
Explanation:
As is the world without rain, so live a people whose king is without kindness.