கொடுங்கோன்மை
திருக்குறள்:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
ADVERTISEMENTS
ஆட்சிக்கோல்
ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப்
பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
மு.வ உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும்
இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக்
கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.
ADVERTISEMENTS
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.
ADVERTISEMENTS
The
request (for money) of him who holds the sceptre is like the word of a
highway robber who stands with a weapon in hand and says "give up your
wealth".