கொடுங்கோன்மை
திருக்குறள்:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
ADVERTISEMENTS
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
மு.வ உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களின்
பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு
பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.
ADVERTISEMENTS
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.
ADVERTISEMENTS
The
king who gives himself up to oppression and acts unjustly (towards his
subjects) is more cruel than the man who leads the life of a murderer.