செங்கோன்மை
திருக்குறள்:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
ADVERTISEMENTS
குடிமக்களைப்
பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு
இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.
மு.வ உரை:
குடிகளைப்
பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய
குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அயலவர்
அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக்
களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர்
தொழில்.
ADVERTISEMENTS
Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings.
ADVERTISEMENTS
In
guarding his subjects (against injury from others), and in preserving
them himself; to punish crime is not a fault in a king, but a duty.