சுற்றந்தழால்

திருக்குறள்:
 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் 
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

மு.வ உரை:
தன்னிடமிருந்து
பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன்
நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு
காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு
காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து,
ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well, consider, and receive!.

ADVERTISEMENTS
Explanation:
When
one may have left him, and for some cause has returned to him, let the
king fulfil the object (for which he has come back) and thoughtfully
receive him again.