சுற்றந்தழால்

திருக்குறள்:
 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

மு.வ உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன்
பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன்
தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

ADVERTISEMENTS
Translation:
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.

ADVERTISEMENTS
Explanation:
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).