தெரிந்துவினையாடல்

திருக்குறள்:
 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் 
கோடாமை கோடா துலகு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உழைப்போர்
உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும்.
எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய
வேண்டும்.

மு.வ உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மேல்
பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால்
பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.

ADVERTISEMENTS
Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.