தெரிந்துவினையாடல்
திருக்குறள்:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
ADVERTISEMENTS
உழைப்போர்
உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும்.
எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய
வேண்டும்.
மு.வ உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேல்
பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால்
பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.
ADVERTISEMENTS
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.
ADVERTISEMENTS
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.