தெரிந்துவினையாடல்

திருக்குறள்:
 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் 
வேறாகும் மாந்தர் பலர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

மு.வ உரை:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

ADVERTISEMENTS
Translation:
Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!.

ADVERTISEMENTS
Explanation:
Even
when (a king) has tried them in every possible way, there are many men
who change, from the nature of the works (in which they may be
employed).