தெரிந்துவினையாடல்

திருக்குறள்:
 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை 
ஆராய்வான் செய்க வினை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

மு.வ உரை:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பொருள்
வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து,
அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

ADVERTISEMENTS
Translation:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.

ADVERTISEMENTS
Explanation:
Let
him do (the king's) work who can enlarge the sources (of revenue),
increase wealth and considerately prevent the accidents (which would
destroy it).