தெரிந்துதெளிதல்

திருக்குறள்:
 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவரின்
குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக
இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான
முடிவுக்கு வரவேண்டும்.

மு.வ உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனின்
குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து
இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின்
மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.

ADVERTISEMENTS
Explanation:
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.