தெரிந்துதெளிதல்

திருக்குறள்:
 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அரிய
நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்
புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது
அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

மு.வ உரை:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

ADVERTISEMENTS
Translation:
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.

ADVERTISEMENTS
Explanation:
When
even men, who have studied the most difficult works, and who are free
from faults, are (carefully) examined, it is a rare thing to find them
without ignorance.