இடனறிதல்

திருக்குறள்:
 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து 
போற்றார்கண் போற்றிச் செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தாக்குதல்
நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன்
மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

மு.வ உரை:
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

சாலமன் பாப்பையா உரை:
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

ADVERTISEMENTS
Translation:
E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find, protect themselves, and work their foes offence.

ADVERTISEMENTS
Explanation:
Even
the powerless will become powerful and conquer, if they select a proper
field (of action), and guard themselves, while they make war on their
enemies.