காலமறிதல்

திருக்குறள்:
 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

மு.வ உரை:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

ADVERTISEMENTS
Translation:
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

ADVERTISEMENTS
Explanation:
Though
(a man) should meditate (the conquest of) the world, he may accomplish
it if he acts in the right time, and at the right place.