வலியறிதல்

திருக்குறள்:
 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மற்றவர்களை
மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக
விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

மு.வ உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

ADVERTISEMENTS
Translation:
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.

ADVERTISEMENTS
Explanation:
He
will quickly perish who, ignorant of his own resources flatters himself
of his greatness, and does not live in peace with his neighbours.