தெரிந்துசெயல்வகை

திருக்குறள்:
 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

மு.வ உரை:
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

ADVERTISEMENTS
Translation:
Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.

ADVERTISEMENTS
Explanation:
Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.