சிற்றினஞ்சேராமை

திருக்குறள்:
 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் 
அல்லற் படுப்பதூஉம் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

மு.வ உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

ADVERTISEMENTS
Translation:
Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.

ADVERTISEMENTS
Explanation:
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.