சிற்றினஞ்சேராமை

திருக்குறள்:
 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

மு.வ உரை:
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

ADVERTISEMENTS
Translation:
Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.

ADVERTISEMENTS
Explanation:
Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.