சிற்றினஞ்சேராமை

திருக்குறள்:
 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்ப தாகும் அறிவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சேர்ந்த
நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை
அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின்
தன்மையைப் பெற்றதாகிவிடும்.

மு.வ உரை:
சேர்ந்த
நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும்,
அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தான்
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே
மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே
ஆகிவிடும்.

ADVERTISEMENTS
Translation:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.

ADVERTISEMENTS
Explanation:
As
water changes (its nature), from the nature of the soil (in which it
flows), so will the character of men resemble that of their associates.