சிற்றினஞ்சேராமை
திருக்குறள்:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
ADVERTISEMENTS
சேர்ந்த
நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை
அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின்
தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மு.வ உரை:
சேர்ந்த
நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும்,
அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான்
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே
மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே
ஆகிவிடும்.
ADVERTISEMENTS
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
ADVERTISEMENTS
As
water changes (its nature), from the nature of the soil (in which it
flows), so will the character of men resemble that of their associates.