பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள்:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
ADVERTISEMENTS
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
மு.வ உரை:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
துறைப்
பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும்
பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.
ADVERTISEMENTS
Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.
ADVERTISEMENTS
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.