பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையு ளெல்லாந் தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவு
ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு
உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

மு.வ உரை:
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவு
முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு
உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம்
முதன்மை ஆனதாகும்.

ADVERTISEMENTS
Translation:
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.

ADVERTISEMENTS
Explanation:
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.