பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள்:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
ADVERTISEMENTS
அறிவு
ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு
உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
மு.வ உரை:
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு
முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு
உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம்
முதன்மை ஆனதாகும்.
ADVERTISEMENTS
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.
ADVERTISEMENTS
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.