பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.

மு.வ உரை:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

ADVERTISEMENTS
Translation:
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.

ADVERTISEMENTS
Explanation:
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.