குற்றங்கடிதல்

திருக்குறள்:
 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கம் பெருமித நீர்த்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

மு.வ உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

ADVERTISEMENTS
Translation:
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

ADVERTISEMENTS
Explanation:
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.