அறிவுடைமை

திருக்குறள்:
 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

மு.வ உரை:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

ADVERTISEMENTS
Translation:
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

ADVERTISEMENTS
Explanation:
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.