அறிவுடைமை

திருக்குறள்:
 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் 
அஃதறி கல்லா தவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

மு.வ உரை:
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

ADVERTISEMENTS
Translation:
The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.

ADVERTISEMENTS
Explanation:
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.