அறிவுடைமை

திருக்குறள்:
 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வ துறைவ தறிவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

மு.வ உரை:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

ADVERTISEMENTS
Translation:
As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.

ADVERTISEMENTS
Explanation:
To live as the world lives, is wisdom.