அறிவுடைமை
திருக்குறள்:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
ADVERTISEMENTS
நாம்
சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு
சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே
அறிவுடைமையாகும்.
மு.வ உரை:
தான்
சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம்
கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரிய
கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங்
கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை
எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
ADVERTISEMENTS
Wisdom hath use of lucid speech, words that acceptance win,
And subtle sense of other men's discourse takes in.
ADVERTISEMENTS
To
speak so as that the meaning may easily enter the mind of the hearer,
and to discern the subtlest thought which may lie hidden in the words of
others, this is wisdom.