அறிவுடைமை

திருக்குறள்:
 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எந்தவொரு
பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

மு.வ உரை:
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

ADVERTISEMENTS
Translation:
Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.

ADVERTISEMENTS
Explanation:
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.