கேள்வி

திருக்குறள்:
 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
வாயின ராதல் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

மு.வ உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

ADVERTISEMENTS
Translation:
'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.

ADVERTISEMENTS
Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.