கேள்வி

திருக்குறள்:
 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

மு.வ உரை:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

ADVERTISEMENTS
Translation:
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.

ADVERTISEMENTS
Explanation:
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.