கேள்வி

திருக்குறள்:
 செவுக்குண வில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

மு.வ உரை:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

ADVERTISEMENTS
Translation:
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

ADVERTISEMENTS
Explanation:
When there is no food for the ear, give a little also to the stomach.