கல்லாமை

திருக்குறள்:
 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 
கல்லார்கண் பட்ட திரு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

மு.வ உரை:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள
வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

ADVERTISEMENTS
Translation:
To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

ADVERTISEMENTS
Explanation:
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.