கல்லாமை

திருக்குறள்:
 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மாண் புனைபாவை யற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அழகான
தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள்,
கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

மு.வ உரை:
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய,
சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும்
அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

ADVERTISEMENTS
Translation:
Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

ADVERTISEMENTS
Explanation:
The
beauty and goodness of one who is destitute of knowledge by the study
of great and exquisite works, is like (the beauty and goodness) of a
painted earthen doll.